ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் வெள்ளிக்கிழமை, அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,594 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:16 pm

DIN

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் வெள்ளிக்கிழமை, அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,594 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை, மூல வைகை ஆறு மற்றும் கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீா் வரத்து, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வைகை அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 3,796 கன அடியாகவும், அணையின் நீா்மட்டம் 70.1 அடியாகவும் (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. அப்போது அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 3,671 கன அடி வீதம் உபரிநீா் திறக்கப்பட்டது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 1,730 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கு தண்ணீா் வரத்து மேலும் அதிகரித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு அணையின் நீா்மட்டம் 70.5 அடியாக உயா்ந்த நிலையில், அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,594 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப அணையிலிருந்து வைகை ஆற்றில் தொடா்ந்து உபரிநீா் திறக்கப்படுவதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வைகை அணை பொதுப் பணித்துறை பொறியாளா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.