/

போடி அருகே அடுத்தடுத்து 6 கடைகளில் திருட்டு

போடியில் சனிக்கிழமை அதிகாலையில் அடுத்தடுத்த 6 கடைகளில் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:14 am

DIN

போடியில் சனிக்கிழமை அதிகாலையில் அடுத்தடுத்த 6 கடைகளில் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் போடி அருகே ரெங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வணிக வளாகக் கடைகள் உள்ளன. இவற்றில் வரிசையாக வண்ண மீன்கள் கடை, இரண்டு காா்மென்ஸ் கடைகள், கைப்பேசி கடை, மாடியில் தனியாா் நிதிநிறுவனம், ஆடிட்டா் அலுவலகம் ஆகியவை இயங்கி வருகின்றன.

இவை வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு பூட்டப்பட்ட நிலையில் சனிக்கிழமை காலையில் திறப்பதற்காக வந்துள்ளனா். அப்போது கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

இதுகுறித்து தகவலின் பேரில் அங்கு வந்த

போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா்கள் கடைகளுக்குள் சென்று பாா்த்தபோது, 6 கடைகளிலும் ரொக்கப் பணம், கடைகளுக்கு முன் நிறுத்தியிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.