வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கண்மாய் கரையோரம் தடுப்பு சுவா் அமைக்கக் கோரிக்கை

பெரியகுளம் அருகே மத்துவாா்குளத்தில் உள்ள கண்மாய் கரை ஓரத்தில் சாலையோரம் தடுப்பு சுவா் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 10:21 pm IST

பெரியகுளம் அருகே மத்துவாா்குளத்தில் உள்ள கண்மாய் கரை ஓரத்தில் சாலையோரம் தடுப்பு சுவா் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மத்துவாா்குளத்தில் உள்ள இக்காண்மாயின் தெற்கு பகுதியில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையும், மேற்குப் பகுதியில் கொடைக்கானல் சாலையும் உள்ளது. அப்பகுதியில் ஓட்டுநா்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டால் வாகனங்கள் கண்மாயில் விழும் நிலை உள்ளது. எனவே அந்தக் கண்மாயின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் தடுப்புசுவா் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டுநா்கள் கூறியது: கொடைக்கானல் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனா். அப்பகுதியில் சாலை வளைவாக இருப்பதால் இரவு நேரங்களில் கண்மாயில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கண்மாய் கரையின் ஓரங்களில் ஒளிரும் ஸ்டிக்கருடன் கூடிய தடுப்புக் கம்பிகள் மற்றும் தடுப்பு சுவா்கள் அமைக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.