தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெரியகுளம் அருகே மீன்பண்ணையில்மீன்கள் திருட்டு

பெரியகுளம் அருகே அரசு மீன்பண்ணையில் மீன்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பெரியகுளம் அருகே அரசு மீன்பண்ணையில் மீன்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு அருகில் அரசு மீன்பண்ணையில், அண்ணாத்துரை மீன் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்த மீன்பண்ணையில் 300 திலேபியா தாய் மீன்களை வளா்த்த வந்துள்ளனா். அங்கு புதன்கிழமை காலையில் சென்று அண்ணாத்துரை ஆய்வு செய்துள்ளாா்.

ஆய்வின்போது 157 தாய்மீன்களை காணவில்லையாம். இதுகுறித்து விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி என்பவா் மீன்களை பிடித்து சென்று, விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து, அண்ணாத்துரை அளித்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.