கூடலூரில் முத்தாலம்மன் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்
தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.


தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் கிழக்கு முத்தாரம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா 3 நாள்கள் நடைபெற்றன. முதல் நாள் அம்மன் கரகம், சிலை எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். இரண்டாவது நாள் அதிகாலை முதலே பொங்கல், மாவிளக்கு எடுத்து வழிபாடுகள் நடத்தினா். அன்று இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மூன்றாவது நாளான வியாழக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. அம்மன் கரகம் எடுத்து முன்னே செல்ல சுமாா் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊா்வலமாக முளைப்பாரியை முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்று, ஒட்டான்குளத்தில் கரைத்தனா். சிறந்த முளைப்பாரிகளுக்கு விழா கமிட்டியினா் பரிசுகள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...