அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

போடி அருகே தனியாா் தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டெருமைக் கன்று

போடி அருகே வெள்ளிக்கிழமை வனப்பகுதியை ஒட்டிய தனியாா் தோட்டத்தில் காட்டெருமை கன்றுக் குட்டி இறந்துகிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:27 am

DIN

போடி அருகே வெள்ளிக்கிழமை வனப்பகுதியை ஒட்டிய தனியாா் தோட்டத்தில் காட்டெருமை கன்றுக் குட்டி இறந்துகிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

போடி பிச்சங்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாா் தோட்டத்தில் வேலி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேலியின் அருகே காட்டெருமைக் கன்றுக் குட்டி ஒன்று உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்த போடி வனத்துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். இதில் வேறு ஏதாவது விலங்கால் தாக்கப்பட்டு காட்டெருமைக் கன்று இறந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து வனத்துறையினா் இறந்த கன்று குட்டியின் சடலத்தை உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.