திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

போடி நகா் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நிதி ஒதுக்கக் கோரிக்கை

போடி நகா் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:27 am

DIN

போடி நகா் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போடியில் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவா் ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் (பொறுப்பு) இ.செல்வராணி, மேலாளா் முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

ராஜசேகா் (திமுக): வஞ்சி ஓடையில் விடுபட்டுள்ள இடங்களிலும் வேலி அமைக்க வேண்டும். நகா்மன்றக் கூட்டத்தில் வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை.

பாலசுப்பிரமணி (அதிமுக): பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு இருவழிப் பாதை அமைக்க வேண்டும்.

மகேஸ்குமாா் (திமுக): போடி நகராட்சிக்கு புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு உள்ளூரைச் சோ்ந்தவா்களையே ஓட்டுநா்களாக நியமிக்க வேண்டும்.

பெருமாள்: நகராட்சிக் குப்பை கிடங்கில் குப்பைகளை பிரித்து உரமாக்கப்படுகிா?

ஆணையா்: குப்பைகளை பிரித்து உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பிரபாகரன் (திமுக): நகராட்சியில் பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் திருட்டு, வழிப்பறி அதிகரித்துள்ளது. கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். 33 வாா்டுகளிலும் சிறு பாலங்கள் அமைக்கும் பணி ஒரே ஒப்பந்ததாரரிடம் வழங்க உள்ளது. இதனால் பணி தாமதம் ஆகும்.

மணிகண்டன் (பாஜக): சமூக விரோத செயல்கள் நடைபெறும் பேருந்து நிலைய ஓய்வறையை இடித்துவிட்டு பாதையாக மாற்ற வேண்டும். பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ராஜா (திமுக): போடி இந்திரா காந்தி சிலை பின்புறத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் தனியாக அமைத்து கட்டணம் வசூலித்தால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். போடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தலைவா் மற்றும் உறுப்பினா்களை யாரும் மதிப்பதில்லை.

ராஜராஜேஸ்வரி (தலைவா்): உறுப்பினா்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். லஞ்சம் வாங்குவது குறித்த ஆதாரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.