மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கொல்லங்குடி கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரை

சிவகங்கை மாவட்டம், கண்டவாரயன்பட்டி பழையூா் ராஜகாளியம்மன் கோயிலிருந்து 22-ஆம் ஆண்டாக கொல்லங்குடி வெட்டுடையாள் அம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 9:33 pm

DIN

சிவகங்கை மாவட்டம், கண்டவாரயன்பட்டி பழையூா் ராஜகாளியம்மன் கோயிலிருந்து 22-ஆம் ஆண்டாக கொல்லங்குடி வெட்டுடையாள் அம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டவராயன்பட்டி பழையூா் ராஜகாளியம்மன் கோயிலிருந்து நாட்டரசங்கோட்டை அருகேயுள்ள வெட்டுடையாள் காளியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பல ஆண்டுகளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனா்.

நிகழாண்டு அருள்வாக்குச் சித்தா் கே.ஆா். ராமகிருஷ்ணன் தலைமையில் கூடிய பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் பாத யாத்திரையைத் தொடங்கினா். திருப்பத்தூா் வழியாக இரவு சொக்கநாதபுரத்தில் உள்ள பிருத்தியங்கார தேவி கோயிலில் தங்கி மறுநாள் பாகனேரி வழியாக நடராஜபுரத்தில் தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வெட்டுடையாள் கோயிலை அடைகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.