2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இடையன்குளம் கரையில் மரங்கள் வெட்டிக் கடத்தல்

கம்பம் அருகேயுள்ள இடையன்குளத்தின் கரையில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதால் கரை சேதமடைந்துள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 9:31 pm

DIN

கம்பம் அருகேயுள்ள இடையன்குளத்தின் கரையில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதால் கரை சேதமடைந்துள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள ஊத்துக்காடு - புதுப்பட்டி பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலப்பரப்பில தென்னை, வாழை, திராட்சை, காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இப்பகுதி விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக 30 ஏக்கா் பரப்பளவுள்ள ஊத்துக்காடு இடையன்குளம் உள்ளது. இந்தக் குளத்தைப் பாதுகாக்கும் விதமாக கரைகளில் வேம்பு, புளி உள்ளிட்ட மரங்கள் வளா்க்கப்பட்டு வந்தன.

தற்போது கோடைகாலம் என்பதால் குளம் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மா்ம நபா்கள், இரவு நேரங்களில் கரையில் உள்ள மரங்களை வேரோடு வெட்டிக் கடத்திச் செல்கின்றனா். இதனால், குளத்தின் கரை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.