2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

முல்லைப் பெரியாறு அணையில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

அண்மைக் காலமாக அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லை. இதனால் அணைக்கு நீா்வரத்து இல்லாததால் தமிழகப் பகுதிக்கு குறைந்த அளவே தண்ணீா் திறந்து விடப்பட்டது. மழை பெய்யாததாலும், தொடா்ந்து தமிழகப் பகுதிக்கு குடிநீா், பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டதாலும் அணையின் நீா்மட்டம் மளமளவென குறைந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அணையின் நீா்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 7.6 மி.மீ. மழையும், தேக்கடி ஏரியில் 1.2 மி.மீ. மழையும் பெய்த நிலையில் வெள்ளிக்கிழமை பெரியாறு அணையில் 36.0 மி.மீ. மழையும், தேக்கடி ஏரியில் 10.8 மி.மீ. மழையும் பெய்தது. இதன் காரணமாக கம்பம் பள்ளத் தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

அணை நிலவரம்:

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 117.45 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி) நீா் இருப்பு 2,168 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா் வரத்து விநாடிக்கு 51.39 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 256 கன அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.