2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

News image
Updated On :11 மே 2023, 4:43 pm

DIN

தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

சுருளி அருவிக்கு, தற்போது கோடை விடுமுறைக் காலம் என்பதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

இந்தநிலையில், தற்போது கோடை மழை பெய்து வருவதால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, பிற்பகல் நேரங்களில் அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சுருளி அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

இதுகுறித்து கம்பம் கிழக்கு வனச் சரகா் வி. பிச்சைமணி கூறியதாவது:

சுருளி அருவியின் நீா்வரத்துப் பகுதிகள் அடா்ந்த வனப் பகுதிக்குள் உள்ளன. கோடை மழை திடீரென பெய்வதால், நீா்வரத்தும் திடீரென அதிகரிக்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நீா்வரத்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீா்வரத்து குறைந்ததும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.