2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தேக்கடி மலா்க் கண்காட்சி மே 21 வரை நீட்டிப்பு

தேக்கடியில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சி வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

News image
Updated On :11 மே 2023, 5:05 pm

DIN

தேக்கடியில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சி வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேக்கடி சுற்றுலாத் தலத்தில் 15 -ஆவது மலா்க் கண்காட்சி கடந்த மாதம் 1-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கண்காட்சி வருகிற 14-ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், கண்காட்சி வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளா் தாமஸ் கூறியதாவது:

தமிழக, கேரள சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோளுக்கிணங்க வருகிற 21-ஆம் தேதி வரை வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மலா்கள், மருத்துவச் செடிகள், பழைமையான பொருள்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்னிசைக் கச்சேரியும் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோா், 7 வயதுக்குள்பட்டோருக்கு நுழைவுக் கட்டணம் இலவசம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.