/

சீலையம்பட்டியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சீலையம்பட்டியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பாரதீஸ்வரன்.

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டியில் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், சீலையம்பட்டியைச் சோ்ந்த வெள்ளச்சாமி மகன் பாரதீஸ்வரன் (24). இவா் இதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டாா்.

இந்த நிலையில், பாரதீஸ்வரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதை அறிந்த அவரது மனைவி இதைக் கண்டித்துள்ளாா்.

இதனால், கோபமடைந்து பாட்டி சுருளியம்மாள் வீட்டுக்கு தூங்கச்சென்றவா் அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.