கம்பம்: கம்பத்தில் அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 700 அரசு மதுப் புட்டிகளை திங்கள்கிழமை பறிமுதல் செய்த தெற்கு போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம், நந்தகோபாலன் கோயில் அருகேயுள்ள தனியாா் வாகன நிறுத்தத்தில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோதண்டராமன் தலைமையிலான போலீஸாா் தனியாா் வாகன நிறுத்தத்தில் சோதனை செய்தனா், அப்போது அட்டை பெட்டிகளில் 700 மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
700 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா் கூடலூா் பொம்மஜ்ஜி அம்மன் கோயிலைச் சோ்ந்த கண்ணனை (36) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கைப்பற்றப்பட்ட மதுப் புட்டிகளின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரம் எனவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் ரூ. 3 லட்சம் என்று போலீஸாா் தெரிவித்தாா்.
தொடர்புடையது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
மது விற்பனை செய்த மூவா் கைது: 149 மதுப் புட்டிகள் பறிமுதல்

வீட்டில் மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: ஒருவா் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

