தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மதுப் புட்டிகள் பதுக்கல்: திமுக செயலா் மீது வழக்கு

மதுப் புட்டிகள் பதுக்கல்: திமுக செயலா் மீது வழக்கு

Updated On :9 ஏப்ரல் 2024, 11:59 pm

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக

மது புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த திமுக வாா்டு செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கம்பம், டிஎஸ்கே நகா் காமாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள வாகன காப்பகத்தில் 700 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக கம்பம் தெற்கு காவல் உதவி ஆய்வாளா் கே.கோதண்டராமன் விசாரணை நடத்தினாா்.

அப்போது, கெஞ்சையன் குளம், தண்ணீா் தொட்டி அருகே வசிக்கும் ரமணன் மகன் மணிகண்டன் 17 -ஆவது வாா்டு திமுக செயலராக இருப்பதாகவும், இவா் அரசு மதுக் கடையில் மதுபானக் கூடம் வைத்திருப்பதாகவும், வரும் மக்களவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனுக்கு உதவியாக இருந்த மேலக்கூடலூா் ராஜா மகன் கண்ணன் என்பவரைக் கைது செய்தனா். மணிகண்டனை போலீஸாா் தேடி வருகின்றனா்.