கம்பம்: மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின் போது அதிமுக தலைமையில் மாற்றம் வரும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியதுபோல, தோ்தல் முடிவுகள் வெளியான பின்னா் மாற்றம் தானாகவே நடக்கும் என்று அமமுக பொதுச் செயலரும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற பால்தாயம்மன் கோயில் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேனியில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, அதிமுக தலைமையில் மாற்றம் வரும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியது போல, தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்த நிகழ்வு தானாக நடைபெறும். தற்போது, 6 போ் அதிமுகவை ஒப்பந்தம் எடுத்து வணிக நிறுவனம் போல நடத்தி வருகின்றனா். அது கண்டிப்பாக முறியடிக்கப்படும் என்றாா் அவா்.
கோயில் வழிபாடுகளை முடித்த தினகரன் அந்த வளாகத்தில் இருந்த போது, தேனி தெற்கு மாவட்ட திமுக செயலரும், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ராமகிருஷ்ணன் அங்கு வந்தாா். இருவரும் நேருக்கு நோ் சந்தித்துக் கொண்டு கை குலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனா்.
தொடர்புடையது

அமமுக வேட்பாளர்களை ஆதரித்து ஏப். 6 முதல் டிடிவி தினகரன் பிரசாரம்!

மன்னாா்குடியில் அதிமுக கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

9 ஆண்டுகளுக்குப் பின்னா் அதிமுக தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.

திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கின்றனா்: டிடிவி தினகரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


