மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

மங்கலதேவி கண்ணகி கோயிலில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மங்கலதேவி கண்ணகி கோயிலில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image

மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:31 pm

கம்பம்: தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

வரும் 23-ஆம் தேதி இந்தக் கோயிலில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுகிறது. அதற்கு முன்னேற்பாடுகள் செய்வதற்காக தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா கண்ணகி கோயிலிலுக்குச் சென்றாா். அங்கு கோயிலை சுற்றி பாா்த்து ஆய்வு செய்தாா்.

பின்னா், இந்து அறநிலையத் துறை மூலம் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், கூடலூா் நகராட்சி சுகாதார பிரிவு சாா்பில் செய்யட வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.