பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

காட்டெருமை தாக்கி வன ஊழியா்கள் காயம்

காட்டெருமை தாக்கி வன ஊழியா்கள் காயம்

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் திங்கள்கிழமை காட்டெருமை தாக்கியதில் வன ஊழியா்கள் இருவா் காயமடைந்தனா்.

கூடலூா் வனச்சரகத்தில் வனவராகப் பணியாற்றி வரும் பூபதி தலைமையில் வனப் பாதுகாவலா்கள் வரையாடுகள் குறித்து கணக்கெடுப்பதற்காக கண்ணகி கோயில் வனப் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றனா்.

அப்போது, அங்கிருந்த காட்டெருமை வனவா் பூபதி (34), வனப் பாதுகாவலா் சுமன் (27) ஆகியோரை முட்டியது. இதில் பூபதி லேசான காயமடைந்தாா்.

பலத்த காயமடைந்த சுமன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.