பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 5:11 pm

Din

தேனி: கேரளத்திலிருந்து தேனி மாவட்டத்துக்கு கறிக் கோழிகள், வாத்துகள், முட்டைகளை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதன் எதிரொலியாக, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு, தமிழக-கேரள எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, கேரளத்திலிருந்து தேனி மாவட்டத்துக்கு கறிக் கோழிகள், கோழிக் குஞ்சுகள், வாத்துகள், முட்டைகள், கால்நடை தீவனம், கோழிப் பண்ணை உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.