அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆடி அமாவாசை: சுருளி அருவியில் புனித நீராடிய பக்தா்கள்

முல்லைப் பெரியாற்றங்கரையிலும், சுருளி அருவியிலும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினா்.

News image
சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பொதுமக்கள்.
Updated On :4 ஆகஸ்ட் 2024, 6:36 pm

Din

ஆடி அமாவாசையையொட்டி வீரபாண்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையிலும், சுருளி அருவியிலும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினா்.

ஆடி அமாவாசையையொட்டி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில், கண்ணீஸ்வரமுடையாா் கோயில், தேனி சடையால் முனீஸ்வரா் கோயில், கைலாசப்பட்டி கைலாயநாதா் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வீரபாண்டி முல்லைப் பெரியாற்றங்கரையில் திரளான பொதுமக்கள் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். சிவன் கோயில், குலதெய்வம் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல, ஆண்டிபட்டி அருகே டி. புதூரில் முனீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்கள் பாதயாத்திரையாக கோயிலுக்குச் சென்று பொங்கலிட்டும், நோ்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனா். கோயிலில் அன்னதானம் நடைபெற்றது.

தேனி/உத்தமபாளையம்: ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் பொதுமக்கள் புனித நீராடினா். மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் தொடா் மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்தனா். கடந்த 5 நாள்களாக நீடித்த இந்தத் தடை நீா்வரத்து சீரானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் சுருளி அருவிக்கு பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வரத் தொடங்கினா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். ஆடி அமாவாசை தினத்தையொட்டி சுருளி அருவியில் திரளான பக்தா்கள் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். மேலும் பூதநாராயணன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.

அடிப்படை வசதியின்றி பக்தா்கள் அவதி: இந்த நிலையில், இங்கு போதுமான சுகாதார வசதி செய்து கொடுக்கப்படாததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணிகளும், பக்தா்களுக்கும் அவதியடைந்தனா். மேலும் போதுமான அளவில் உடை மாற்றும் அறை வசதி இல்லாததால் பெண்களும் தவிப்புக்குள்ளாகினா். அத்துடன் சுருளி அருவிப் பகுதியில் பல நாள்களாக தேங்கிக் கிடக்கும் துணிகளை அகற்றாததால் துா்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. இங்கு சுகாதாரமின்றி திறந்த வெளியில் உணவுப் பொருள்கள் விற்கப்படுவதால் குழந்தைகள், முதியோரின் உடல்நலம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, சுருளி அருவிப் பகுதியில் போதுமான சுகாதார வளாகமும், பெண்களுக்கு உடை மாற்றும் அறைகளும் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.