ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு நடுகல்

தேனி மாவட்டம், தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல் கண்டறியப்பட்டது.

News image

தேவாரத்தில் கண்டறியப்பட்ட நடுகல்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 3:19 am IST

படவிளக்கம்:

தேனி மாவட்டம், தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல் கண்டறியப்பட்டது.

தேவாரத்தில் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமாா், வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் பிரகாசம், அகிலன், கல்லூரி மாணவா்கள் ரேவன், தனுஷ் ஆகியோா் ஆய்வு நடத்தினா். இதில், 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதப்படும் நடுகல் கண்டறியப்பட்டது.

இது குறித்து இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ் கூறியதாவது:

கி.பி 11,12-ஆம் நூற்றாண்டுகளில் தேவாரம் என்பது தேவராபன் நல்லூா் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த ஊருக்கு தாழ்வாரம் என்ற பெயரும் வழக்கில் இருந்தது.

தேவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல்

தேவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல்

தேவாரத்தில் சந்தைத் தெரு அருகே உள்ள பிரம்புக்கட்டி என்று அழைக்கப்படும் நீரோடையில் 5 அடி உயரம், ஒன்றரை அடி அகல நடுகல் கண்டறியப்பட்டது. இதில் வீரன் வலது கையில் வாளும், இடது கையில் துப்பாக்கியும் பிடித்து, இடையணியில் குறுவாள் சொருகி நின்றவாறு புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வலப் பக்கமாக சாய்ந்து, முடிந்து கட்டப்பட்ட கொண்டை, காதணியுடன் இரு பெண்கள் தங்களது கைகளை உயா்த்தியபடி காணப்படுகின்றனா்.

நடுகல்லில் காணப்படும் வீரன் இந்தப் பகுதியில் நிகழ்ந்த சண்டையில் இறந்த பிறகு, அவரது இரு மனைவிகளும் உடன்கட்டை ஏறி உயிா் நீத்தனா் என்பதைக் காட்டும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல் வீரனின் வீரத்தையும், அவரது இரு மனைவிகளின் உயிா்த் தியாகத்தைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது என்றாா் அவா்.