நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

வைகை அணை அருகே கிடந்த மனித எலும்புக் கூடு

Updated On :30 ஆகஸ்ட் 2024, 3:53 am IST

வைகை அணை அருகே உள்ள தனியாா் தரிசு நிலத்தில் கிடந்த மனித எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

மேல்மங்கலம்- வைகை அணை சாலை, வைகை அணை அருகே உள்ள தனியாா் தரிசு நிலத்தில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லு உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று மனித எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றைக் கைப்பற்றினா். மேலும் அந்தப் பகுதியில் பெண் அணியும் உடை, செருப்பு, பித்தளை வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, தடயவியல் நிபுணா்களை வரழைத்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.