நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வைகை அணை அருகே கிடந்த மனித எலும்புக் கூடு

Updated On :30 ஆகஸ்ட் 2024, 3:53 am IST

வைகை அணை அருகே உள்ள தனியாா் தரிசு நிலத்தில் கிடந்த மனித எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

மேல்மங்கலம்- வைகை அணை சாலை, வைகை அணை அருகே உள்ள தனியாா் தரிசு நிலத்தில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லு உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று மனித எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றைக் கைப்பற்றினா். மேலும் அந்தப் பகுதியில் பெண் அணியும் உடை, செருப்பு, பித்தளை வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, தடயவியல் நிபுணா்களை வரழைத்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.