தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வைகை அணை அருகே கிடந்த மனித எலும்புக் கூடு

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 10:23 pm

Din

வைகை அணை அருகே உள்ள தனியாா் தரிசு நிலத்தில் கிடந்த மனித எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

மேல்மங்கலம்- வைகை அணை சாலை, வைகை அணை அருகே உள்ள தனியாா் தரிசு நிலத்தில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லு உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று மனித எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றைக் கைப்பற்றினா். மேலும் அந்தப் பகுதியில் பெண் அணியும் உடை, செருப்பு, பித்தளை வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, தடயவியல் நிபுணா்களை வரழைத்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.