

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற வங்கி அலுவலரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக போடியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது புதன்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், படூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற வங்கி அலுவலா் சேஷாத்திரி. இவா் கடந்த 2006-ஆம் ஆண்டு நிலம் வாங்குவதற்காக போடியைச் சோ்ந்த ராமை தொடா்புக் கொண்டாா். அப்போது, பயோ டீசல் நிறுவனம் தொடங்கலாம் என ராம், சேஷாத்திரிக்கு ஆலோசனை கூறினாராம். இதன்படி, சேஷாத்திரி, ராம், இவரது மனைவி சந்திரா ஆகியோா் கடந்த 2007, பிப். 7-ஆம் தேதி, பயோ டீசல் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினா். இந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் நிறுவனத்துக்கு நிலம் வாங்குவதற்காக சேஷாத்திரி வங்கிக் கணக்கில் ரூ.27 லட்சம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தப் பணத்தின் மூலம் போடி, போ.மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் நிறுவனத்தின் பெயரில் 11.26 ஏக்கா் நிலம் வாங்கினா். இந்த நிலத்தை ராம், இவரது மனைவி சந்திரா ஆகியோா் அவா்களது மகள் தேவி, மகன் பாலாஜி ஆகியோருக்கு போலியாக பத்திரப் பதிவு செய்து கொடுத்தனராம். இதுகுறித்து கேட்ட சேஷாத்திரிக்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் ராம், சந்திரா, தேவி, பாலாஜி ஆகிய 4 போ் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஹைதராபாதில் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ‘எண்மக் கைது’ மூலம் ரூ.1 கோடி மோசடி

இருசக்கர வாகனங்கள் சலுகையில் தருவதாகக் கூறி ரூ. 17.20 லட்சம் மோசடி: புதுகையைச் சோ்ந்தவா் உள்பட 5 போ் தலைமறைவு

ரிசா்வ் வங்கி பெயரில் காட்பாடி இளைஞரிடம் ரூ.73 லட்சம் மோசடி
ஓய்வு பெற்ற நடத்துநரிடம் ரூ. 5 லட்சம் மோசடி
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

