ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேகமலை வனத் துறையைக் கண்டித்து சோதனைச் சாவடி முன் ஆா்ப்பாட்டம்

வனத் துறையைக் கண்டித்து, மேகமலை விவசாயிகள், தனியாா் எஸ்டேட் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

~

Updated On :12 டிசம்பர் 2024, 10:08 pm

Din

வனத் துறையைக் கண்டித்து, மேகமலை விவசாயிகள், தனியாா் எஸ்டேட் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மேகமலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காப்பி, ஏலக்காய் விவசாயம் செய்கின்றனா். இந்தத் தோட்டங்களில் தொழிலாளா்கள் குடியிருப்புக்கு குடிநீா் வசதி செய்தல், பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்யத் தேவையான உபகரணங்களை எடுத்து செல்லவும், அரசு நாற்றுப் பண்ணையிலிருந்து காபி, ஏல நாற்றுகளை எடுத்துச் செல்லவும் வனத் துறையினா்தடை விதித்தனா்.

இதைக் கண்டித்து விவசாயிகள், தனியாா் எஸ்டேட் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மேகமலை வனத் துறை சோதனைச் சாவடி முன்பாக கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பவயிடத்துக்கு வந்த ஓடைப்பட்டி காவல் ஆய்வாளா் சுந்தரபாண்டியன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சமாதானம் செய்ததைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தை ஒத்தி வைத்தனா்.

இது குறித்து எஸ்டேட் உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறுகையில், 15 நாள்களில் விவசாயிகளுடன் இணைந்து தனிக்குழு அமைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, அதன் மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா் என்றாா்.