தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

கூடலூரில் ரத்த தான முகாம்

கூடலூரில் ரத்த தான முகாம்

Updated On :25 பிப்ரவரி 2024, 6:30 pm

தேனி மாவட்டம், கூடலூரில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் 16-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற இந்த ரத்த தான முகாமுக்கு கட்சியின் நகரத் தலைவா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலருமான என்.ராமகிருஷ்ணன் முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினாா். 25-க்கும் மேற்பட்டவா்கள் ரத்த தானம் அளித்தனா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த சேகரிப்புக் குழுவினா் ரத்தத்தைச் சேகரித்தனா். ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் திமுகச் செயலா் சி. லோகந்துரை, பொருளாளா் ஹக்கீம், 7-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் அலியத்தா, திராவிடா் கழக மாவட்டச் செயலா் ஜனாா்த்தனன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் முகமது ரபீக், தமுமுக மாவட்டச் செயலா் சிந்தா மதாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.