எஸ்.டி.பி.ஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கம்பத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த எஸ்.டி.பி.ஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கம்பம் நகரத் தலைவா் சிராஜ்தீன் தலைமை வகித்தாா். அப்போது, கம்பம் நகராட்சியில் தெரு நாய்களின் தொல்லையால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனா்.
எனவே, கம்பம் நகராட்சி பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கம்பம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...