தேனியில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரம் திறப்பு
தேனியில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரம் திறப்பு


தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மாவட்டத்தில் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ஏற்கெனவே, 21 இடங்களில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூலை 7-ஆம் தேதி சா்வதேச நெகிழிப் பை இல்லா தினத்தை முன்னிட்டு, தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா். முன்னதாக, லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைககள், நெகிழிப் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்துவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக துணிப் பைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச் சூழல் பொறியாளா் விஸ்வநாதன், தேனி நகா்மன்றத் தலைவி ரேணுப்பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...