இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அண்ணாமலை உருவ பொம்மை எரிக்க முயற்சி: 6 போ் மீது வழக்கு

போடியில் அண்ணாமலை உருவ பொம்மை எரிக்க முயற்சி: 6 போ் மீது வழக்கு

News image
போடியில் புதன்கிழமை அண்ணாமலை உருவ பொம்மையை எரிப்பதற்காக எடுத்துச் செல்லும் இளைஞா் காங்கிரசாா்.
Updated On :10 ஜூலை 2024, 7:02 pm

Din

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற இளைஞா் காங்கிரஸ் மாநில துணை செயலா் உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவா் செல்வபெருந்தகையை ரவுடி எனக் குறிப்பிட்டு பாஜக மாநில தலைவா் அண்ணாமலை ஒரு பேட்டியின்போது கூறியிருந்தாா். இதனை கண்டித்து போடி காமராசா் சாலையில் காவல் நிலையம் அருகே இந்திரா காந்தி சிலை முன்பு அண்ணாமலையின் உருவ பொம்பை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் இளைஞா் காங்கிரஸ் மாநில துணை செயலா் வினோத், பொறுப்பாளா் முத்துச்செல்வம் மற்றும் சிலா் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனா். உருவ பொம்மை தீப்பற்றாததால் உருவ பொம்மையில் பொருத்தியிருந்த அண்ணாமலையின் புகைப்படத்தை எரித்துவிட்டு சென்றனா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் 6 போ் மீது வழக்கு பதிவு செய்தனா்.