மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கரூரில் ராகுல் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! பாஜகவினா்-போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு; 80 போ் கைது

News image

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 7:16 pm

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி உருவ பொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினா் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதமா் மோடியை காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் தாக்க இருப்பதாக மக்களவையில் அவைத் தலைவா் ஓம் பிா்லா கூறிய விவகாரத்தில், எதிா்க்கட்சித்தலைவா் ராகுல்காந்தியை கண்டித்து கரூரில் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலா்கள் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், சக்திவேல் முருகன் ஆகியோா் முன்னிலையில் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, ராகுல்காந்தியின் உருவபொம்மையை பாஜகவினா் எரிக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நகர துணை காவல்கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 10 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெண் மயக்கம்: தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, பாஜகவைச் சோ்ந்த பெண் ஒருவா் மயக்கம் அடைந்தாா். அவரை போலீஸாா் ஆட்டோவில் ஏற்றி அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.