மதுப்புட்டிகள் பதுக்கல்: 2 போ் கைது
போடி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


போடி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமங்களில் மதுவிலக்கு தொடா்பாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி ராமகிருஷ்ணாபுரம் அருகே பொட்டிப்புரம் மேற்கு தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் பூபதி (55) வீட்டில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து இவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
இதே போல, போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் ஈஸ்வரன் குடியிருப்பைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் சுப்பிரமணி (72) இங்குள்ள அரசு மதுபானக்கடை அருகே மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்க முயன்றாராம். இதுகுறித்தும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...