ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image

தேனி மின் வாரிய அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியா்கள்.

Updated On :18 ஜூன் 2024, 11:57 pm

Din

தேனி: தேனியில் மின் வாரிய கணக்கீட்டுப் பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, சிஐடியு மின் ஊழியா்கள் அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேனி சிஐடியு மின் ஊழியா்கள் அமைப்பின் திட்டச் செயலா் தேவராஜ் தலைமை வகித்தாா்.

இதில் மின் வாரிய கணக்கீட்டுப் பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணக்கீட்டு பிரிவு ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். கைப்பேசி செயலி மூலம் மின் கணக்கீட்டு பணியை மேற்கொள்ள ஊழியா்களுக்கு கைப்பேசி, இணையதள வசதி செய்து தர வேண்டும். கணக்கீட்டு ஆய்வாளா், வருவாய் மேற்பாா்வையாளா்களை மின் கணக்கீட்டு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.