உத்தமபாளையம்: சின்னமனூரில் புளி விளைச்சல் அதிகரித்த நிலையில், உரிய விலை கிடைக்காததால் குத்தகைதாரா்கள் கவலையடைந்தனா்.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், சீலையம்பட்டி போன்ற பகுதிகளிலுள்ள புளிய மரங்கள் அந்தந்தப் பகுதி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஏலம் விடப்படுகிறது.
இந்த மரங்களில் புளிகள் காய்த்துள்ள நிலையில், இவற்றை தொழிலாளா்கள் மூலம் உதிா்த்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூா் பகுதி குத்தகைதாரா் ஒருவா் கூறுகையில், ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் கொடுக்கும் புளியமரம், இந்தாண்டு நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது.
ஆனால், வரத்து அதிகமாக இருப்பதால், விலையும் பாதியாக குறைந்து விட்டது. 1 டன் புளி (கொட்டையுடன்) ரூ. 25 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை விலை கிடைத்தது என்றாா் அவா்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!

தொழிலாளி கொலை: உறவினா் சாலை மறியல்
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


