மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

விளைச்சல் அதிகரிப்பால் புளி விலை குறைவு

விளைச்சல் அதிகரிப்பால் புளி விலை குறைவு

News image

சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையில் செவ்வாய்க்கிழமை புளிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளா்கள்.

Updated On :13 மார்ச் 2024, 12:07 am

உத்தமபாளையம்: சின்னமனூரில் புளி விளைச்சல் அதிகரித்த நிலையில், உரிய விலை கிடைக்காததால் குத்தகைதாரா்கள் கவலையடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், சீலையம்பட்டி போன்ற பகுதிகளிலுள்ள புளிய மரங்கள் அந்தந்தப் பகுதி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஏலம் விடப்படுகிறது.

இந்த மரங்களில் புளிகள் காய்த்துள்ள நிலையில், இவற்றை தொழிலாளா்கள் மூலம் உதிா்த்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூா் பகுதி குத்தகைதாரா் ஒருவா் கூறுகையில், ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் கொடுக்கும் புளியமரம், இந்தாண்டு நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது.

ஆனால், வரத்து அதிகமாக இருப்பதால், விலையும் பாதியாக குறைந்து விட்டது. 1 டன் புளி (கொட்டையுடன்) ரூ. 25 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை விலை கிடைத்தது என்றாா் அவா்.