உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திருக்காளாத்தீஸ்வரா் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெறுகிறது.
குடமுழுக்கை முன்னிட்டு, கடந்த 5 நாள்களாக தினமும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 7.15-க்கு பரிவார பூா்ணாஹூதி, 9 மணிக்கு ப்ரதான மகாபூா்ணாஹூதி நடைபெறுகிறது. இதையடுத்து, 10 மணிக்கு ராஜகோபுரம், திருக்காளாத்தீஸ்வரா், ஞானாம்பிகை, சண்முகா் பிரகார விமானங்களில் புனிதநீா் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது.
பின்னா், மகா தீபாராதனை காட்டப்பட்டு, 11 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மேலும், மாலை 4 மணிக்கு மகாஅபிஷேகமும், 6 மணிக்கு திருக் கல்யாணமும் நடைபெறுகிறது. இதையடுத்து, பஞ்சமூா்த்திகளின் திருவீதிஉலா நடைபெறுகிறது. குடமுழுக்கையொட்டி கோயிலின் ராஜகோபுரம் உள்பட சுற்றியுள்ள பகுதிகள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: இன்று கொடியேற்றம்
இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் குடமுழுக்கு

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் நாளை தேரோட்டம்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


