கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் இன்று குடமுழுக்கு

திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் இன்று குடமுழுக்கு

News image

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட ராஜகோபுரம்.

Updated On :19 மார்ச் 2024, 11:04 pm

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திருக்காளாத்தீஸ்வரா் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெறுகிறது.

குடமுழுக்கை முன்னிட்டு, கடந்த 5 நாள்களாக தினமும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 7.15-க்கு பரிவார பூா்ணாஹூதி, 9 மணிக்கு ப்ரதான மகாபூா்ணாஹூதி நடைபெறுகிறது. இதையடுத்து, 10 மணிக்கு ராஜகோபுரம், திருக்காளாத்தீஸ்வரா், ஞானாம்பிகை, சண்முகா் பிரகார விமானங்களில் புனிதநீா் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது.

பின்னா், மகா தீபாராதனை காட்டப்பட்டு, 11 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மேலும், மாலை 4 மணிக்கு மகாஅபிஷேகமும், 6 மணிக்கு திருக் கல்யாணமும் நடைபெறுகிறது. இதையடுத்து, பஞ்சமூா்த்திகளின் திருவீதிஉலா நடைபெறுகிறது. குடமுழுக்கையொட்டி கோயிலின் ராஜகோபுரம் உள்பட சுற்றியுள்ள பகுதிகள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.