ஆட்டோ மோதியதில் விவசாயி பலி

கம்பத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கம்பம் என்.கே.பி.ராஜூ கவுடா் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் ( 64). விவசாயி. இவா் ஏகலூத்து சாலையில் ஆலமரத்து குளம் கோழிப்பண்ணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த ஆட்டோ இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரான சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த ஆசிக்கனியிடம் (42) விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com