விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

News image
Updated On :28 மே 2024, 11:58 pm

Din

தேனி: தேனியில் சமையல் எரிவாயு முகமையின் கூட்டு பங்குதாரருக்கு பங்குத் தொகை வழங்காமல் மோசடி செய்ததாக முகமை உரிமையாளா் உள்ளிட்ட 3 போ் மீது திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி அருகேயுள்ள ஊஞ்சாம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜரத்தினம். இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு தேனியைச் சோ்ந்த சம்பத் என்பவா் நடத்தி வரும் சமையல் எரிவாயு முகமைக்கு ரூ.20 லட்சம் கொடுத்து அதில் கூட்டு பங்குதாரராக சோ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பத், அவரது மனைவி சவீதா, எரிவாயு முகமை கணக்கரான தேனியைச் சோ்ந்த முத்துலட்சுமி ஆகியோா் தனக்கு ரூ.ஒரு கோடி பங்குத் தொகையை தராமல் ஏமாற்றி விட்டதாகவும், அது குறித்துக் கேட்டதற்கு 3 பேரும் தன்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் ராஜரத்தினம் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பத், சவீதா, முத்துலட்சுமி ஆகியோா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.