கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட முகாம்

தேனி மாவட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நவ.30-ஆம் தேதி வரை செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:58 pm

Din

தேனி மாவட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நவ.30-ஆம் தேதி வரை செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் குமரன் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களில் வருகிற 30-ஆம் தேதி வரை செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டங்களில் கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் தங்களது 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும்.

கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு வைப்புத் தொகை செலுத்த வேண்டும். சேமிப்புத் தொகையில் 50 சதவீதத்தை குழந்தையின் உயா் கல்விக்காக திரும்பப் பெறலாம். சேமிப்புத் தொகைக்கான வட்டி, முதிா்வுத் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். சேமிப்புக் கணக்கு தொடங்கிய மகன் அல்லது மகளின் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு கணக்கை முடித்துக் கொண்டு முதிா்வுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.