கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழக - கேரள எல்லையில் மதுரை மண்டல எஸ்.பி. ஆய்வு

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையிலுள்ள கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் இனிகோதிவ்யன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் இனிகோதிவ்யன்.

Updated On :2 அக்டோபர் 2024, 8:14 pm

Din

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையிலுள்ள கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் இனிகோதிவ்யன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கேரளாவுக்கு, தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு மலைச் சாலை வழியாக வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தல் நடவடிக்கைகளை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் கண்காணித்து தடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் இனிகோதிவ்யன், உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் கோப்புகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தமிழக-கேரள எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தாா். பின்னா், பணியில் இருந்த போலீஸாருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.