ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மாநில நல்லாசிரியா் விருது: தேனி மாவட்டத்தில் 9 போ் தோ்வு

தேனி மாவட்டத்தில் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 9 பள்ளி ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 8:57 pm

Din

தேனி மாவட்டத்தில் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 9 பள்ளி ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு, செப்.5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்து, அவா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கி வருகிறது.

தேனி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறுவதற்கு 9 பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் விழாவில் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறாா்.

விருது பெறும் நல்லாசிரியா்கள்:

1.அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை ரா.மு.மகேஸ்வரி. 2. தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தா.ராமநாதன். 3.கோம்பை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை மு.முத்தழகு. 4.தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வா் நா.பூரணசெல்வி. 5.சின்னமனூா் ஒன்றியம், கருச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஜோ.கண்ணன். 6.க.மயிலை ஒன்றியம், முத்தாலம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை த.சரவணஸ்ரீ. 7.கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகா் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை க.சாந்தி. 8.க.மயிலை ஒன்றியம், கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரெ.கண்ணன். 9.ஆண்டிபட்டி இந்து மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சு.வேலுச்சாமி.