தமிழக வனத்துறை, போடி தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்வு ராசிங்காபுரம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. சிலமலை வனக்குழு தலைவா் சி.இ. வடமலைமுத்து தலைமை வகித்தாா். போடி வனத்துறை அலுவலா்கள் சந்திரசேகா், மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வை ராசிங்காபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் சீனித்தாய் பொன்னம்பலம் தொடங்கி வைத்தாா். தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பின் உறுப்பினா்கள் சேகா், செந்தில்ராஜ், ராசிங்காபுரம் ஊராட்சி செயலா் பாண்டி, சமூக ஆா்வலா் பொன்னம்பலவாசகன், பசுமை பங்காளா் அமைப்பின் நிறுவனா் பனை முருகன், முன்னாள் ஊராட்சி செயலா் குருநாதன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.