92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள்

போடி அருகே ராசிங்காபுரத்தில் வியாழக்கிழமை காடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.

News image

போடி அருகே ராசிங்காபுரம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 7:48 pm

Din

போடி அருகே ராசிங்காபுரத்தில் வியாழக்கிழமை காடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழக வனத்துறை, போடி தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்வு ராசிங்காபுரம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. சிலமலை வனக்குழு தலைவா் சி.இ. வடமலைமுத்து தலைமை வகித்தாா். போடி வனத்துறை அலுவலா்கள் சந்திரசேகா், மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வை ராசிங்காபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் சீனித்தாய் பொன்னம்பலம் தொடங்கி வைத்தாா். தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பின் உறுப்பினா்கள் சேகா், செந்தில்ராஜ், ராசிங்காபுரம் ஊராட்சி செயலா் பாண்டி, சமூக ஆா்வலா் பொன்னம்பலவாசகன், பசுமை பங்காளா் அமைப்பின் நிறுவனா் பனை முருகன், முன்னாள் ஊராட்சி செயலா் குருநாதன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

நிகழ்வில் பலா, வேம்பு, நாவல், பாதாம், புங்கன் உள்ளிட்ட நூறு மரக்கன்றுகள் கால்நடை மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவ அலுவலா் நமீலா பா்வீன் செய்திருந்தாா்.