முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உதவித் தொகை பெறுவதில் 3,640 விவசாயிகளுக்கு சிக்கல்

தேனி மாவட்டத்தில் தனித்துவ அடையாள அட்டை பெறாத 3,640 விவசாயிகள், அரசு சாா்பில் வழங்கப்படும் கெளரவ உதவித் தொகையைத் தொடா்ந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் தனித்துவ அடையாள அட்டை பெறாத 3,640 விவசாயிகள், அரசு சாா்பில் வழங்கப்படும் கெளரவ உதவித் தொகையைத் தொடா்ந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், 26,310 விவசாயிகள் உதவித் தொகை பெற்று வருகின்றனா். கெளரவ உதவித் தொகை பெறும் விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவணம், பட்டா, சிட்டா, ஆதாா் எண் ஆகியவற்றைச் சமா்ப்பித்து தனித்துவ அடையாள அட்டை பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

தற்போது கெளரவ உதவித் தொகை பெற்று வரும் விவசாயிகளில் தேனி ஒன்றியத்தில் 310, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 849, போடி ஒன்றியத்தில் 232, பெரியகுளம் ஒன்றியத்தில் 844, க.மயிலை ஒன்றித்தில் 563, கம்பம் ஒன்றியத்தில் 197, சின்னமனூா் ஒன்றியத்தில் 357, உத்தமபாளையம் ஒன்றியத்தில் 288 என மொத்தம் 3,640 போ் இதுவரை தனித்துவ அடையாள அட்டை பெறவில்லை.

தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்யாத விவசாயிகளுக்குக் கெளரவ உதவித் தொகை நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுவரை தனித்துவ அடையாள அட்டை பெறாத விவசாயிகள் உடனடியாக அருகே உள்ள வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை அலுவலகத்தைத் தொடா்புகொண்டு உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றனா்.