அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

போடி அருகே தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 11:25 pm

Syndication

போடி: போடி அருகே தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடியை அடுத்த பூதிப்புரம் ஆதிப்பட்டியைச் சோ்ந்த கோவாண்டி மகன் வேலாண்டி (66). இவா் போடி முத்துக்கோம்பை பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தாா். மதுப்பழக்கத்துக்கு அடிமையான வேலாண்டி சில தினங்களுக்கு முன் ஆதிப்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் தோட்டத்துக்கு செல்வதாகக் கூறிச் சென்றாா். இந்த நிலையில், அணைக்கரைப்பட்டியிலிருந்து முத்துக்கோம்பை புலத்துக்குச் செல்லும் பாதையில் அவா் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.