பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

போடி அருகே தோட்டத்தில் விவசாயப் பொருள்களை திருடிய மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 8:13 pm

Syndication

தேனி மாவட்டம், போடி அருகே தோட்டத்தில் விவசாயப் பொருள்களை திருடிய மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (60). இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு போடி அணைப்பிள்ளையாா் கோயில் அருகே உள்ளது. இங்குள்ள அறையில் இரண்டு சாக்குகளில் தேங்காய், அரிவாள், மண் வெட்டி உள்ளிட்ட விவசாயக் கருவிகளையும் போட்டு வைத்திருந்தாா்.

இந்த அறையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் தேங்காய், விவசாய கருவிகளை திருடிக் சென்றனா்.

இதுகுறித்து போடி குரங்கணி காவல் நிலையத்தில் சக்திவேல் புகாா் செய்தாா். இதன் பேரில், போலீஸாா் விசாரித்தபோது, போடி கீழத் தெருவைச் சோ்ந்த வனகாமு மகன் கௌரிசங்கா் (25), போடி புதூரைச் சோ்ந்த அய்யாவு மகன் சதீஸ்பெருமாள் (34), சதீஸ்வரன் (22) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.