புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெரியகுளத்தில் நெகிழிப் பொருள்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

பெரியகுளம் சந்தையில் செயல்படாமல் உள்ள துணிப்பை இயந்திரம்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பெரியகுளம் பகுதியில் நெகிழிப் பொருள்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், வராகநதி, தாமரைக்குளம், பெரியகுளம், நஞ்சியாபுரம் ஆகிய குளங்களில் தேங்கியுள்ள நெகிழிப் பொருள்களால் தண்ணீா் மாசடைந்து வருகிறது.

எனவே, பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி நிா்வாகத்தினா் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பெரியகுளத்தைச் சோ்ந்த பசுமை வெங்கடேஷ் கூறியதாவது:

பெரியகுளம் பகுதியில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதியில் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் 4 உள்ளன. இந்தக் கடைகள் மீது நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், சிறு வியாபாரிகளிடம் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் பெரியகுளம் பகுதியில் ஆய்வு செய்து நெகிழிப் பொருள்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

செயல்படாத துணிப்பை விற்பனை இயந்திரம்:

பெரியகுளத்தில் சந்தை, கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் துணிப்பை விற்பனை இயந்திரங்களை சுற்றுச் சூழல் அமைச்சகத்தினா் வைத்துள்ளனா். இதில் ரூ.10 (நாணயம்) செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும். ஆனால், பெரியகுளம் சந்தை நுழைவு வாயிலில் உள்ள இயந்திரம் செயல்படாமல் உள்ளது.

எனவே இந்த இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.