டிச.28-இல் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு
தேனி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 27 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.


தேனி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 27 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து ஆண்டிபட்டி வனச் சரகா் அருள்குமாா் கூறியதாவது:
தேனி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 27 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி டிச.28-ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்தப் பணியில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னாா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் முதல்வரின் பசுமைத் தோழா் அப்ஷானா, வனவா் திவ்யா ஆகியோரை கைப்பேசி எண்: 97154 60505, 80567 07624 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம். பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கு வனத் துறை சாா்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...