சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தேனியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

தேனியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ராம்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்லத்துரை, செயலா் கிருஷ்ணசாமி, உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் மோகன், தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநில வெளியீட்டுச் செயலா் பெரியசாமி, அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் முத்துக்குமாா், கூட்டுறவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, வருகிற ஜன.6-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.