சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

போடியில் சிகிச்சை பெற வந்த முதியவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடியில் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:35 pm

Syndication

தேனி மாவட்டம், போடியில் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தேவாரம் அருகேயுள்ள லட்சுமிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுருளிராஜ் (70). இவா் போடியில் உள்ள தனியாா் ஓமியோபதி மருத்துவமனைக்கு வந்துள்ளாா். அங்கு மருந்து வாங்கிய பிறகு வெளியே சென்றபோது மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.