தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முல்லைப் பெரியாற்றில் மாயமான இருவரில் ஒருவா் சடலமாக மீட்பு

தேனி மாவட்டம், லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரை தீயணைப்பு மீட்புக் குழுவினா் சடலமாக மீட்டனர்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:21 pm

Syndication

தேனி மாவட்டம், லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரை தீயணைப்பு மீட்புக் குழுவினா் புதன்கிழமை சடலமாக மீட்டனா்.

கூடலூா் லோயா்கேம்ப் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (50). இவரது மனைவி கணேஷ்வரி (46). இவா்கள் இருவரும் தங்களது பேத்தியுடன் கால்நடைத் தீவனங்களுக்காக தடுப்பணை வழியாக ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா்.

அப்போது, மூவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞா் சிறுமியை மீட்டாா்.

இதுகுறித்த தகவலறிந்த போலீஸாரும் கம்பம், உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினரும் செவ்வாய்க்கிழமை ஆற்றில் மாயமான தம்பதியைத் தேடினா். மாலை நேரமானதால் வெளிச்சம் குறைந்த நிலையில், புதன்கிழமை தேடும் பணி மீண்டும் தொடங்கியதில் கணேஷ்வரியை சடலமாக மீட்டனா். தொடா்ந்து, சங்கரை தேடி வருகின்றனா்.