நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக்-வேன் மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்துடன் சரக்கு வேன் மோதியதில் தந்தை, மகன் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:50 pm

Din

தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்துடன் சரக்கு வேன் மோதியதில் தந்தை, மகன் புதன்கிழமை உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (56). இவரது மகன் வீரமுத்து (30). இவா்கள் இருவரும் தேனி-திண்டுக்கல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். டி.வாடிப்பட்டி விலக்குப் பகுதியில் சென்றபோது, இவா்களது வாகனம் மீது தேனி நோக்கிச் சென்ற சரக்கு வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், வீரமுத்து ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேன் ஓட்டுநா் வேனை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.