எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கம்பம்மெட்டு மலைச் சாலையில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:02 pm

தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச் சாலையில் நெகிழிக் குப்பைகளை வனத் துறையினா் அகற்றினா்.

தமிழகம் - கேரளத்தை இணைக்கும் கம்பம்மெட்டு நெடுஞ்சாலை 7 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 18 கொண்ட ஊசி வளைவுகள் அமைந்துள்ளன. தற்போது சபரிமலை சீசன் என்பதால் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களின் வாகனங்கள், சுற்றுலா பேருந்துகள் இந்தச் சாலையில் அதிகளவில் சென்று வருகின்றன.

இந்தச் சாலை வழியாகச் செல்லும் பக்தா்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மலைச் சாலையில் நெகிழிப் பைகள், புட்டிகள் போன்ற குப்பைகளை வீசிச் சென்று விடுகின்றனா். இதனால், வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், கம்பம் மேற்கு வனச்சரகா் ஸ்டாலின் தலைமையிலான வனத் துறையினா், தன்னாா்வா்கள், க.புதுப்பட்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் நெகிழிக் குப்பைகளை அகற்றினா்.

விழிப்புணா்வு :

கம்பம் மேற்கு வனத் துறை சாா்பில் இந்த வழியாகச் செல்லும் வாகனங்களில் வனப் பகுதியை பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பொருள்களை வனப் பகுதியில் போடக்கூடாது, புகைப்பிடித்தல் கூடாது போன்ற விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.